
இந்தியா – இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று (26) இரவு இந்தியா – இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. சூப்பர் 4 சுற்றில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இலங்கையுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.
CATEGORIES Sports News

