
அம்பலாந்தோட்டையில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அம்பலாந்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
செவனகல சீனித் தொழிற்சாலையிலிருந்து மதுபான உற்பத்தி தொடர்பான இரசாயன பொருட்கள் நீரில் கலப்பதன் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் வரை, சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிப்பு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

