
இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவு மற்றும் வருடாந்த பொதுக் கூட்டம்
இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவு மற்றும் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று (27) இலங்கை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
நீண்ட காலமாக ஊடகத் துறைக்கு விலைமதிப்பற்ற சேவைகளை வழங்கிய ஊடகவியலாளர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Alkahtani), இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் இஹாப் கலீல், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளர் என்.ஏ.எம்.சாதிக் ஷிஹான், பொருளாளர் கியாஸ் ஏ புஹாரி, தேசிய அமைப்பாளர் இர்ஷாத் ஏ காதர் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஊடகவியலாளர்கள் குழுவும் கலந்து கொண்டனர்.

