பாகிஸ்தான் அமைச்சரின் கையில் ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்தியா

பாகிஸ்தான் அமைச்சரின் கையில் ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்தியா

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

இந்திய அணி கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கிண்ண நிர்வாகம் கிண்ணத்தை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, இந்திய அணி கிண்ணமின்றி வெற்றியைக் கொண்டாடியது.

இறுதிப் போட்டியில் வெற்றி அணிக்கு கிண்ணத்தை வழங்குவதற்கு ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொக்சின் நஹ்பியுடன் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே இந்திய அணி அவர்களிடம் இருந்து கிண்ணத்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

எனினும், வெற்றிக்கிண்ணமும் பதக்கங்களும் விரைவில் இந்தியாவுக்கு மீள வழங்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )