நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் ஒருவர் பலி

நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் ஒருவர் பலி

திக்வெல்லவில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன், பாடசாலை மைதானத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பாடசாலையின் நீச்சல் குளத்தில் பந்து விழுந்த நிலையில், அதை எடுக்க முற்பட்டபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )