
சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களின் சிந்தனை முறைகளை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம்
குழந்தைகளின் இளம் வயதிலேயே அவர்களின் மனதில் உருவாகும் வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் கதைகள் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் சக்திவாய்ந்த காரணியாக உள்ளன என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அனுசரணையில் நிறுவப்பட்ட சிறுவர் புத்தகங்கள் குறித்த தேசிய மாநாட்டால் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்ட சிறிவர் புத்தகங்கள் குறித்த ஆலோசனைகளின் தொகுப்பான “Fiction Wonderland: A Comprehensive Guide to Creating Children’s Fiction Books” என்ற புத்தகத்தை அமைச்சருக்கு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

