
வெளிநாட்டில் பணிபுரியும் போது இறந்த நான்கு தொழிலாளர்களுக்கு இழப்பீடு
வெளிநாட்டில் பணிபுரியும் போது பல்வேறு காரணங்களால் இறந்த நான்கு இலங்கை தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனத்தால் அண்மையில் ரூ. 18,213,556 ( ஒரு கோடியே எண்பத்து இரண்டு இலட்சத்து பதின்மூன்று ஆயிரத்து ஐநூற்று ஐம்பத்தாறு ரூபாய்) இழப்பீடாக வழங்கப்பட்டது.
குவைட் நாட்டில் பணிபுரியும் போது இறந்த டபிள்யூ.ஏ. தம்மிகா, திருமதி டபிள்யூ.பி. சீதா பத்மா குமாரி மற்றும் சானிகா மதுஷானிஆகியோருக்கும், சவுதி அரேபியாவில் பணிபுரியும் போது இறந்த நளினி டி சில்வா ஆகியோருக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டது.
CATEGORIES Sri Lanka

