
அதிக விலைக்கு குடிநீர் போத்தல்கள் விற்பனை ; 25 மில்லியன் அபராதம் வசூல்
அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையில் இதுவரை 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் 306 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
CATEGORIES Sri Lanka

