சீனாவில் கடலில் விழுந்த சரக்கு விமானம் ; 2 பேர் பலி

சீனாவில் கடலில் விழுந்த சரக்கு விமானம் ; 2 பேர் பலி

சீனாவில் உள்ள ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த போயிங் 747 சரக்கு விமானம் நேற்று தரையிறங்கும் போது , ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த விமானம் முதலில் பயணிகள் விமானமாக இயக்கப்பட்டு தற்போது சரக்கு விமானமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )