
30 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் வத்தளையில் பத்மேவின் 3 உதவியாளர்கள் கைது
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளியவத்த பகுதியில் சுமார் 35 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருளை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டம், ‘முழுநாடும் ஒன்றாக ‘ தேசிய நடவடிக்கையின் கீழ் அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .
இந்த சோதனை நடவடிக்கையின் போது, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கெஹெல் பத்தர பத்மேவின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 25, 21 மற்றும் 28 வயதுடைய வத்தளை பள்ளியவத்த , அவரகொடுவ மற்றும் கலககந்துவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சோதனையின் போது, சந்தேக நபர்களிடம் 2 கிலோகிராம் 165 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பெறப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

