
கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியில் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு
களுத்துறை, கட்டுக்குறுந்த கடற்கரையில் இன்று (05) காலை பொதியொன்று மீட்கப்பட்ட நிலையில், அதில் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியில் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன் அதன் பெறுமதி 3 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பிலான களுத்துறை கட்டுக்குறுந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

