
குளவி தாக்குதலுக்கு இலக்காகி ருஹுணு பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழுவொன்று இன்று (14) குளவித் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி நிலையத்தில் நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக சென்றிருந்த மாணவர்கள் குழுவொன்று, மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூட்டை கலைத்தமையால் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

