4 கோடி ரூபாய் குஷ் போதைப்பொருள் கட்டுநாயக்கவில் பறிமுதல்

4 கோடி ரூபாய் குஷ் போதைப்பொருள் கட்டுநாயக்கவில் பறிமுதல்

4 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரிசோதனைகள் முடிவடைந்ததன் பின்னர் , விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே இந்த மூன்று பயணிகளையும் , விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்களின் பைகளில் 4 கிலோகிராம் 22 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்கவிற்கு வந்ததாகவும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )