
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயற்பாட்டை இன்று ஆரம்பித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ சின்னங்களை அணிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (24) ஏற்பாடு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான,16 நாள் செயற்பாட்டின் உலகளாவிய பிரச்சாரத்தை குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
வன்முறை இல்லாத மற்றும் கண்ணியத்துடன் வாழ்வது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை என பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இன்று பாராளுமன்றத்தில் இது பற்றி கூறுகையில் ,
பாலின பாகுபாடின்றி அனைவருக்கும் வன்முறை இல்லாமல் வாழ உரிமை உண்டு. மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது அனைத்து தனிநபர்களின் பொறுப்பாகும்.
2025ஆம் ஆண்டுக்கான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்வாதம் பிரச்சாரம் நாளை செவ்வாய்க்கிழமை (25) ஆரம்பமாகி டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பிரச்சாரத்திற்கு இணையாக இலங்கை முழுவதும் பல்வேறு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டு முதல், வன்முறை இல்லாத மற்றும் கண்ணியத்துடன் வாழ்வது ஒரு அடிப்படை மனித உரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், இந்தப் பிரச்சினை தொடர்பில் உலகளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வருட பிரச்சாரம் டிஜிட்டல் தளத்தில் பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பது, தொழில்நுட்பம் மூலம் நடத்தப்படும் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றைக் கையாள்வதில் கவனம் செலுத்துவதாக அமைகிறது.
இதற்கு எதிரான அரசியல் கருத்துக்கள் இருந்தாலும், ஏனையவர்களின் தனியுரிமையை மீறும் வெறுக்கத்தக்க அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் பாராளுமன்றத்தில் முன்மாதிரியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இலங்கையில், ஐந்து பெண்களில் ஒருவர் (20 சதவீதம்) ஏதோ ஒரு வகையான வன்முறையை அனுபவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 345 இன் கீழ், பாலியல் துன்புறுத்தல் ஒரு குற்றவியல் குற்றமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க அனுமதிக்கின்றமையும் சட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு
நலம் விசாரிக்க CIDக்கு வந்தேன்
உங்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு தற்கொலை குண்டுவெடிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர், அவர்களில் ஒருவர் தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
மற்றொரு நபர் இராணுவ தலைமையக வளாகத்திற்குள் குண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

