Next Sri Lanka இளைஞர் தொழிற்பயிற்சி உதவித்தொகை திட்டத்தின் 2 ஆம் கட்டம் ஆரம்பம்

Next Sri Lanka இளைஞர் தொழிற்பயிற்சி உதவித்தொகை திட்டத்தின் 2 ஆம் கட்டம் ஆரம்பம்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து பாடசாலையை விட்டு வெளியேறியவர்களை தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிநடத்துவதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சால் செயல்படுத்தப்படும் அரசாங்கத் திட்டமான Next Sri Lanka திட்டத்தின் இரண்டாம் கட்டம் (2026) ஆரம்பமாகியுள்ளது.

இதன் கீழ், 2026 ஆம் ஆண்டில் 20,000 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிக்காக அதிகபட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளது. NAITA மற்றும் VTA பயிற்சி மையங்கள் போன்ற அரச தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்குமேலதிகமாக, மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட NVQ 3 பாடநெறிகளை நடத்தும் தனியார் துறையிலும் பாடநெறிகளுக்கு பதிவு செய்யலாம். இது குறித்த மேலதிக தகவல்களை கிராம அலுவலர் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரியிடமிருந்து பெற்றுககொள்ள முடியும்.

நாட்டின் சுற்றுலாத் துறையில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புககளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையில் பயிற்சி பாடநெறிகளுக்கு இந்த இளைஞர்களை அதிக அளவில் வழிநடத்தும் நோக்கில், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், ஏற்கனவே இலங்கை ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் சுற்றுலா நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது குறித்த கலந்துரையாடல் நேற்று (24) அமைச்சின் கேட்போர் கூடத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் நடைபெற்றது.

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் தீர ஹெட்டியாராச்சி மற்றும் பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )