சீரற்ற வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

சீரற்ற வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

சீரற்ற் வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், புத்தளம், வனாத்தவில்லு பிரதேச செயலகத்துடன் இணைந்து புக்குளம் மீன்பிடி கிராம மக்களுக்கு நிவாரணம் 2025 டிசம்பர் 09 அன்று வழங்கப்பட்டதுடன், நயாறு குளம் வழியாக அப்பகுதி மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் கீழ், கடற்படை நானூற்று ஐம்பது (450) பேரையும் முப்பத்து மூன்று (33) மோட்டார் சைக்கிள்களையும் பாதுகாப்பாக 2025 டிசம்பர் 09 அன்று கொண்டு சென்றது.

No photo description available.

அதன்படி, சீரற்ற் வானிலையின் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நயாறு வாவியின் குறுக்கே பாலங்கள் இடிந்து விழுந்ததால், கடற்படை 2025 டிசம்பர் 01 முதல் நாயாறு மற்றும் கோகிலாய் இடையே பொதுமக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக எட்டு (08) டிங்கி படகுகளை நிறுத்தியுள்ளது, இதுவரை 2377 பேரையும் 175 மோட்டார் சைக்கிள்களையும் கொண்டு சென்றுள்ளது.

No photo description available.

வெள்ளம் காரணமாக பயன்படுத்த முடியாத 438 குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்து பொது பயன்பாட்டிற்கு வழங்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பொது இடங்களை சுத்தம் செய்வதில் கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகின்றது.

May be an image of text

மேலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய கடற்படைக் கப்பல்கள் மூலம் தீவுக்கு கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை விரைவாக தரையிறக்குவதற்கும் கடற்படை பங்களித்தது, மேலும் மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதில் கடற்படை தொடர்ந்து பங்களிக்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )