
கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கையில் கத்திக்குத்து ஒருவர் உயிரிழப்பு
கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடையொன்றின் முன்னால் சென்று கொண்டிருந்தபோது நேற்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

