
கொத்து சாப்பிட்ட நபர் உயிரிழப்பு
கடந்த 24ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் பணியிடத்திலிருந்து வீடு திரும்பிய ஒருவர், தனது மூத்த சகோதரருடன் சேர்ந்து உண்பதற்காக கொத்து ரொட்டி பொதியொன்றை வாங்கி சாப்பிட்டார்.
சாப்பிட்ட சில நேரங்களில் இரவு 10.30 மணியளவில் வாந்தி மற்றும் வயிற்று வலி அறிகுறிகள் தோன்றியதால், நபர் கல்பத வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சேர்க்கப்பட்ட சில நேரத்திற்குள் அவர் உயிரிழந்தார்.
அதே உணவை உட்கொண்ட அவரது மூத்த சகோதரருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
ஹொரண திடீர் மரண விசாரணை அதிகாரி, உயிரிழப்புக்கான சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

