
கங்க இஹல கோரளை பிரதேச சபை தவிசாளருக்கு பிணை
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தவிசாளர் இந்திக்க உபுல் குணசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (30) கம்பளை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 3 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
அத்துடன் குறித்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

