
சமூக ஊடக நிதி மோசடிகள் குறித்து பொலிஸார் விசேட எச்சரிக்கை
சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நோக்கில் இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இணையத்தை பயன்படுத்தும் போது சில விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டிலும் சமூக ஊடக நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பதுடன், இவ்வகை குற்றங்களைத் தடுக்க திட்டமிட்ட முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

