தமிழ் கட்சிகள் காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டுமே செய்தனர்

தமிழ் கட்சிகள் காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டுமே செய்தனர்

இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்த போது இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக பேசவில்லை, மாறாக காட்டிக்கொடுக்கும் வேலையைமட்டும் செய்துள்ளனர் என்று கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர் பிரச்னை தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்திய மீனவர் பிரச்னை என்பது பாரிய
பிரச்னையாகவுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடபகுதி மீனவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மாறாக தமிழ்க் கட்சிகள் இவர் இவருடைய ஆள் போன்ற காட்டிக்கொடுப்பு விடயங்களையே பேசினார்கள்.

அரசாங்கம் என்ற ரீதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

அதற்கான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் விரைவில் இடம்பெறும்
என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )