
“மறுமலர்ச்சிக்கான பாதை” திட்டத்தின் ஊடாக கேகாலையில் 03 வீதிகள்கள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் செயல்படுத்தப்படும் “மறுமலர்ச்சிக்கான பாதை” திட்டத்திற்கு ஏற்ப 76 கிராமப்புற சாலைகளை மேம்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக ரூ. 5000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
01.01.2026 முதல் தொடங்கும் இந்த திட்டம், பொது போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்துதல், கிராம இணைப்புகளை வலுப்படுத்துதல், சந்தைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை எளிதாக அணுகுதல் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மூலம் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேகாலை மாவட்ட ஊடகப் பிரிவு

