
போதைப்பொருட்களுடன் இருவர் கைது
ஜா- எல பகுதியில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 75 கிராம் ஹெரோயின், 50 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் கொக்கேயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
CATEGORIES Sri Lanka

