மொறட்டுவை புனித செபஸ்டியன் தேவாலய ஊர்வலம் ; போக்குவரத்து மட்டுப்பாடு

மொறட்டுவை புனித செபஸ்டியன் தேவாலய ஊர்வலம் ; போக்குவரத்து மட்டுப்பாடு

மொறட்டுவை புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடைபெறும் வருடாந்த ஊர்வலத்தை முன்னிட்டு, குறித்த பகுதியிலுள்ள பல பாதைகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று (20) மாலை 4.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பாணந்துறை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், மொரட்டுவ கட்டுபெத்த சந்தியில் இடதுபுறம் திரும்பி பிலியந்தலை நோக்கிச் சென்று, பண்டாரகம வழியாக பாணந்துறை நோக்கி பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், பாணந்துறை மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்திலிருந்து பாணந்துறை வடக்கு கெசல்வத்த வழியாக பழைய காலி வீதியைப் பயன்படுத்தி, மொரட்டுவ குறுக்கு சந்தியில் வலதுபுறம் திரும்பி கொழும்பு நோக்கி செல்ல முடியும்.

ஊர்வலம் புதிய காலி வீதியில் நுழையும் நேரத்தில், கொழும்பு நோக்கி செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்படும் என்றும், அவ்வப்போது கொழும்பு மற்றும் காலி நோக்கி ஒரு பாதை மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி, பொலிஸ் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )