
இலங்கை வந்தார் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (16) பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்
இந்தப் பயணத்தின் போது, கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை சந்தித்து, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடவுள்ளார்
அதேபோல், சமீபத்தில் இலங்கையை தாக்கிய ‘திட்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.

