
இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திஸாநாயக்க நியமனம்
இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் தொடர்பான அறிவிப்பை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த நியமனம் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், துறைமுகத் துறையின் மேலாண்மை மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் பொறுப்பை அவர் வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

