பண மோசடியில் ஈடுபட்ட அமைச்சு அதிகாரி கைது

பண மோசடியில் ஈடுபட்ட அமைச்சு அதிகாரி கைது

பொது நிர்வாக அமைச்சின் உதவி கூடுதல் செயலாளர் ஒருவர் ரூ.2 கோடியே 27 லட்சம் பண மோசடி சம்பவம் தொடர்பில் நேற்று (19) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், தெஹிவளை நதிமலா பகுதியில் வசிக்கும் 56 வயதுடைய குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணைகளின் படி, சந்தேக நபர் ஏழு மாதங்களுக்கு முன்பு துறைமுகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் பணியாற்றியதாகவும், அப்போது துறைமுக வளாகத்தில் ஏலத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை சலுகை விலையில் வழங்க முடியும் எனக் கூறி, புகார் அளித்த மருத்துவரிடமிருந்து பெருமளவு பணம் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால், பின்னர் வாகனமோ பணமோ வழங்காமல் தவிர்த்து வந்ததால், சம்பந்தப்பட்ட மருத்துவர் பொலிஸில் முறையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )