அலாஸ்கா வான்வெளியில் ரஷ்யா ,அமெரிக்கா போர் விமானங்கள் !

அலாஸ்கா வான்வெளியில் ரஷ்யா ,அமெரிக்கா போர் விமானங்கள் !

அலாஸ்காவிற்கு அருகிலுள்ள சர்வதேச வான்வெளியில் பல ரஷ்ய இராணுவ விமானங்கள் இயங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை (NORAD) தெரிவித்துள்ளது.

NORAD வெளியிட்ட அறிக்கையின் படி, அலாஸ்காவின் வான்வெளி பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (ADIZ) இரண்டு Tupolev Tu-95 குண்டுவீச்சு விமானங்கள், இரண்டு Sukhoi Su-35 போர் விமானங்கள் மற்றும் ஒரு Beriev A-50 கண்காணிப்பு விமானம் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா இரண்டு F-16 Fighting Falcon, இரண்டு F-35 Lightning II, ஒரு Boeing E-3 Sentry மற்றும் நான்கு Boeing KC-135 Stratotanker விமானங்களை அனுப்பியுள்ளது.

ரஷ்ய விமானங்கள் அமெரிக்கா அல்லது கனடாவின் வான்வெளிக்குள் நுழையவில்லை என்றும், அவை அலாஸ்காவை விட்டு வெளியேறும் வரை அமெரிக்க மற்றும் கனேடிய விமானங்கள் அவற்றை ஒட்டிச் சென்றதாகவும் NORAD தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் அச்சுறுத்தலாக கருதப்படவில்லை என்றும், அலாஸ்கா வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள் அடிக்கடி காணப்படுவது வழக்கமான ஒன்றாகும் என்றும் NORAD குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )