இன்று நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்று நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ்மட்ட தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 1:00 மணிக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )