
சீனாவில் பட்டாசு கடையில் தீவிபத்து ; 12 பேர் பலி
சீனாவின் ஹுபெய் மாகாணம், ஜியாங்யாங் நகரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட சந்திர புத்தாண்டு விழாவின்போது நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டார்.
சீன ஜோதிடக் கணிப்பின்படி, இது ‘குதிரை ஆண்டு’ தொடக்கத்தை குறிக்கிறது. இந்த காலத்தில் பட்டாசுகள் வெடிப்பது தீ சக்திகளை விரட்டும் மரபாகும்.
ஜியாங்யாங் நகரில் ஏற்பட்ட இந்த படிப்படியான வெடிவிபத்து புது ஆண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில் திடீர் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
CATEGORIES China

