கிருலப்பனையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிருலப்பனையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிருலப்பனை பகுதியில் 05 கிலோ போதைப்பொருளுடன் ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோனஹேன சிறப்புப் படை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஹஷிஷின் மதிப்பு சுமார் 300 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )