
“மத்திய கிழக்கின் அனைத்துப் பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம்” – ஈரான் கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பொருளாதார மையங்களையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் முக்கிய மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பதிலுக்குப் பிராந்தியத்திலுள்ள அனைத்துப் பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) ஜெனரல் இப்ராகிம் ஜப்பாரி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தற்போது மூடப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மோதல்களால் உலக சந்தையில் கச்சா எண்ணெய்

