
லெபனானின் பால்பெக் நகரில் இஸ்ரேல் வான்தாக்குதல் – பலர் உயிரிழப்பு
லெபனானின் கிழக்கு பகுதியிலுள்ள பால்பெக் (Baalbek) நகரில், இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பால்பெக் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
தாக்குதல் நடைபெற்றதும் மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் குடும்பங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

