
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் திறந்த அரசு ஒத்துழைப்பு வலய வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பு
இலங்கையில் திறந்த நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் நோக்கில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன, தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற விசேட சர்வதேச மாநாட்டில் பங்கேற்றார்.
ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் ஜனநாயகத்திற்கான அறக்கட்டளை (WFD) ஏற்பாடு செய்த “திறந்த அரசாங்க ஒத்துழைப்பு வலய (OGP) கற்றல் பரிமாற்ற வட்டமேசை” நேற்று (10) நடைபெற்றது.
இலங்கை, இந்தோனேசியா, மாலத்தீவு மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

