
லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் – இருவர் உயிரிழப்பு
லெபனானின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஷெபா நகரின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

