
யாழ்ப்பாணத்தில் 4700லிற்றர் டீசல்,800 லிற்றர் பெட்ரோல் -400 லிற்றர் மண்ணெண்ணெய் பதுக்கிய களஞ்சியம் கண்டுபிடிப்பு – சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணத்தின் உரேலு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கையிருப்புடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு நடத்திய நடவடிக்கையில் இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த களஞ்சியத்தில் 4700 லிட்டர் டீசல்,
800 லிட்டர் பெட்ரோல் மற்றும்
400 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
CATEGORIES Sri Lanka

