
ஃபிரைட் ரைஸ் – கொத்து -சோறு கறி விலைகள் 20 ரூபாயால் அதிகரிப்பு
உணவக உரிமையாளர்கள் சங்கம், இன்று (06) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ் – கொத்து -சோறு கறி ஆகியவற்றின் விலைகள் ரூ. 20 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதேவேளை தேங்காய் எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக சிற்றுண்டிகளின் விலையை ரூ. 10 குறைக்க முடிவு செய்யப்பட்டதாகக் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் கூறினார்.
மேலும், நேற்று (05) நள்ளிரவு முதல் எரிவாயு விலையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வின் காரணமாக சிற்றுண்டிகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

