
சுமார் 63 கோடி ரூபாய் கப்ருக்க சீட்டிழுப்பில் வென்றுவரலாற்று சாதனை -இன்று பரிசு வழங்கும் நிகழ்வு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, அதன் வரலாற்றில் மிகப்பெரிய லாட்டரி பரிசை வழங்கத் தயாராகி வருகிறது.
இதன் வெற்றித் தொகை 620 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்.
2026 பிப்ரவரி 19 அன்று நடத்தப்பட்ட ‘ஜயமல்ல கப்புருக்க’ லாட்டரி சீட்டிழுப்பில் , ரூ. 629,855,919.60 பரிசுத் தொகையாக விழுந்துள்ளது. இது நாட்டின் லாட்டரி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
உத்தியோகபூர்வ காசோலை வழங்கும் விழா இன்று அதேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெறும்.
இது நாட்டின் வரலாற்றில் இதுவரை வழங்கப்பட்ட மிக அதிகபட்ச லாட்டரி பரிசுத் தொகையாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது லாட்டரி மீதான பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதையும், பரிசுத் தொகைகளின் அளவு அதிகரித்து வருவதையும் பிரதிபலிக்கிறது.

