பல பகுதிகளில் பிற்பகல் 1:00மணிக்குப் பிறகு மழை

பல பகுதிகளில் பிற்பகல் 1:00மணிக்குப் பிறகு மழை

மேல் , சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுர மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 50 மி.மீ. வரை ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சூரியனின் தோற்ற வடதிசை சார்பு இயக்கத்தின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 05 முதல் 15 ஆம் திகதி வரை அது இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே அமையவிருக்கிறது. இன்று (15ஆம் தேதி) சூரியன் மேல்நோக்கி நிற்கும் இலங்கையின் அருகிலுள்ள பகுதிகள் பண்டத்தரிப்பு, தெல்லிப்பளை, வறுத்தலைவிளான், வசாவிளான், மற்றும் மணற்காடு ஆகியவை நண்பகல் 12:10 மணியளவில்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )