
அடுத்த ஒரு ஆண்டிற்குள் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது –
அடுத்த ஒரு ஆண்டிற்குள் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தான் தலையிடும் ஏனைய சர்வதேச நெருக்கடிகளுடன் ஒப்பிடுகையில், இந்த அமைதிச் செயல்முறை ஒப்பீட்டளவில் எளிதானதாக இருக்கும் என அதிபர் குறிப்பிட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் வழங்கும் நிதி உதவி குறித்து டிரம்ப் தனது கவனத்தைச் செலுத்தினார்.
வருங்காலத்தில் ஈரானுடன் எட்டப்படும் எந்தவொரு உடன்படிக்கையிலும், இத்தகைய நிதி உதவிகளை நிறுத்துவது அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
தற்போது நடைமுறையிலுள்ள மூன்று வார கால போர் நிறுத்தத்தின் போது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

