
அனைத்து எரிபொருள் விலைகளும் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
லங்கா வெள்ளை டீசல் -ஒரு லீட்டரின் விலை ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டு – புதிய விலை ரூ. 392
லங்கா சுப்பர் டீசல் – ஒரு லீட்டரின் விலை ரூ. 15 இனால் அதிகரிக்கப்பட்டு -புதிய விலை ரூ. 458
ஒக்டேன் 95 பெட்ரோல் -ஒரு லீட்டரின் விலை ரூ. 15 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ. 470
ஒக்டேன் 92 பெட்ரோல் -ஒரு லீட்டரின் விலை ரூ. 12 இனால் அதிகரிக்கப்பட்டு – புதிய விலை ரூ. 410
லங்கா மண்ணெண்ணெய் – ஒரு லீட்டரின் விலை ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ. 265 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இந்த விலை மாற்றத்தை அறிக்கையினூடாக உறுதிப்படுத்தியுள்ளது.

