
ரமலான் நோன்பு குறித்து குர்ஆன் கூறுவது என்ன ?
“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்.” என ரமலான் நோன்பு குறித்து குர்ஆனில் (ஸூரத்துல் பகரா, 2:183) கூறப்பட்டுள்ளது.
“இந்த ரமலான் மாத நோன்பில், ஸஹர் முதல் இஃப்தார் வரை, சாப்பிட, குடிக்க மட்டுமல்ல, பாலுறவில் ஈடுபடுவது, பொய் சொல்வது, பாவச் செயல்கள் செய்வது, சண்டையிடுவது போன்ற அனைத்து செயல்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். இதை மீறினால், அவர்களது நோன்பு ஏற்கப்படாது.” என்கிறார் மௌலானா சம்சுதீன் காசிம்.
CATEGORIES Sri Lanka