
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விடுதலை
போலி அட்டோனி பத்திரம் தயாரித்து ஆஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்று 21 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் தொழிலதிபர் சிட்னி ஜயசிங்க ஆகியோர் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஆஸ்திரேலிய வர்த்தகரான பிரையன் சாதிக்கிற்குச் சொந்தமான டிஜிட்டல் நொமினீஸ் தனியார் நிறுவனத்தின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தனியார் வங்கிக்கு சொந்தமான 21 மில்லியன் ரூபாய் பங்குகளை போலி அட்டோனி பத்திரத்தை தயாரித்து விற்பனை செய்ததன் ஊடாக 21 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் சிட்னி ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

