யாழில் கடலுக்குள் பாய்ந்த வேன்

யாழில் கடலுக்குள் பாய்ந்த வேன்

பொன்னாலை பாலத்தடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வேன் ஒன்று சேதமடைந்துள்ளது.

காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது.

இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது.

வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )