
பொரளையில் துப்பாக்கிச் சூடு
பொரளை, வனாத்தமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டின் இலக்காக இருந்த நபர், தாக்குதலின் போது தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை பதிவாகவில்லை என்பதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

