
மெக்சிகோவில் மேயருக்கும் பெண் முதலைக்கும் திருமணம்
மழை வேண்டி, மேயருக்கும் பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த வினோத நிகழ்வு மெக்சிகோ நாட்டின் ஒசாகா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.பின்னர் முதலைக்கு முத்தமிட்ட மேயர், அதனை கையில் ஏந்தி நடனமாடியுள்ளார்.
கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

