
CIDயில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவர் இன்று (18) முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

