
முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.

