இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டாண்மையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டாண்மையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டாண்மையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சியிலும் வைபவத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

5 தசாப்தங்களுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒன்றாக உறவுகளை கட்டியெழுப்ப மிகவும் நிலைபேறாகவும் வளமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இது அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துமொரு சந்தர்ப்பமாக விவரிக்கலாம். இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம், நமது நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை மேலும் துரிதப்படுத்த முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )