
ஐஸ் போதைப் பொருள் கடத்திய இளைஞருக்கு கடூழிய சிறை தண்டனை
ஐஸ் போதைப்பொருள் கடத்திய மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞன் மீதான குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி ஐஸ் போதைப்பொருள் ஏற்றிச்சென்ற போது இவர் கைது பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

